Wednesday, October 31, 2007

பார்ப்பன மதவெறி கும்பலை விரட்டியடிப்போம்

கண்டண ஆர்ப்பாட்டம்

குஜராத். .....

குஜராத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், பி.ஜே.பி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகளை தெகல்கா என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளி உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. இந்து ராஷ்டிரத்தை நிறுவ முயலும் இந்த பாசிச கும்பலின் கொடூரமான கொலைகளை தனது உயிரையும் பணயம் வைத்து படம் பிடித்துள்ளது தெகல்கா நிறுவனம். முஸ்லிம் மக்களை கொன்று குவித்த விதத்தை இந்த மதவெறி நாய்களின் ஒப்புதல் வாக்குமூலமாக தருவதை அப்படியே படம் பிடித்து காட்டியப்பின்னும், இந்த வெறி நாய்கள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஒரு கர்பினிப்யான முஸ்லிம் பெண்ணின் வயிற்றை கிழித்து அந்த சிசுவை இரண்டாக பிளந்து வீசியதை ஒரு காட்டுமிராண்டி ஒப்புக்கொள்கிறான், முஸ்லிம் பெண்கள் கொழுகொழுவென்று இருந்தார்கள், அவர்களை நாங்கள் புணர்ந்தோம் என்றும் இந்த நாய்கள் பெருமையுடன் கூறுகின்றன. இதை படிக்கும் போதே நமது உணர்வுகள் கொந்தளிக்க வில்லையா? இந்த நாய்களை கண்ட இடத்திலேயே கொன்று குவிக்க வேண்டாமா? உணர்வுள்ளவன் இந்த நாய்கள் மீது, ஒரு கல்லையாவது வீசாமல் இருக்க முடியுமா?

ஜெயா மாமிக்காக ஞாயிற்றுக்கிழமையும் கடைதிறக்கும் உச்ச நீதிமன்றம் (குடுமி மன்றம்) மோடி, அத்வானி, போன்ற பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு துரும்பை கூட வீசாத மர்மம் என்ன?

இவ்வளவு ஆதாரங்களுக்கு பின்னும் எந்த ஓட்டுப் பொருக்கி அரசியல்வாதியும் பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.

இந்நிலையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளை கண்டித்தும், கைது செய்யக்கோரியும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இன்று மாலை 4 மணியளவில் சென்னையில் ஆர்ப்பாட்டமும், பார்ப்பன பாசிஸ்டுகளின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தின் முழக்கங்களை கீழே காணலாம்:

குஜராத் மக்களை கொன்று குவித்த கொலைகாரன் மோடியை - கைது செய்!

கொலைவெறியை தூண்டிய அத்வாணியை - கைது செய்!

பார்ப்பன மத வெறி கும்பலை - தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!

பெரியார் பிறந்த மண்ணிலே
பார்ப்பன மதவெறி கும்பலை
ஓழித்துக் கட்டுவோம்! ஓழித்துக் கட்டுவோம்!!

இந்து என்று சொல்லாதே!
பார்ப்பான் பின்னால் செல்லாதே!
இந்து என்று சொல்லாதே!
பார்ப்பான் பின்னால் செல்லாதே!

குஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த பார்ப்பன
மதவெறி கொலைகாரன் மோடி,அத்வாணி
வகையராக்களைகைது செய்! கைது செய்!!

மத்திய அரசே! மத்திய அரசே!!
தடை செய்! தடை செய்!!
பார்ப்பன பாசிஸ ஆர்.எஸ்.எஸ், பா.ஜா.க
இந்து முன்னணி, தேச துரோக கும்பலை
தடை செய்! தடை செய்!!

சேது சமுத்திர பந்துக்காக
ஞாயிற்றுக் கிழமையும் விசாரணை நடத்தும்
உச்சிக் குடுமி மன்றமே!
உச்ச நீதி மன்றமே!
குஜராத் முஸ்லீம்களை கொன்றதாக
வாக்கு மூலத்தை அள்ளி வீசுய
பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராக
உன் உச்சிக் குடுமி ஆடாத
மர்மம் என்ன? மர்மம் என்ன?

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து
பச்சிளம் குழந்தையை வெளியில் எடுத்து
இரண்டாய் பிளந்து வீசிய
வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி,க்கு
பாடை கட்டுவோம்! பாடை கட்டுவோம்!!

சாதி ஆதிக்கமும் தீண்டாமையும்
இந்து மதத்தில் இல்லையென்று
கூசாமல் பொய் சொல்லும்
கொலைகாரன் ராமகோபாலனே,
சாதி, தீண்டாமையை நிலைநாட்டும்
மனுநீதி கீதையை
தீயிலிடத் தயாரா?

நாம் அனைவரும் இந்து என்று
பழங்குடி மக்களை அணிதிரட்டி
குஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலே
பழங்குடி மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை
ஆலயத்தின் அர்ச்சகராக
நியமிப்பாயா? நியமிப்பாயா?

நாமெல்லாம் இந்துக்கலென்றால்
சிதம்பரம் கோயில் தீட்சதரை
மாரியாத்தா கோயிலுக்கும்
மாரியாத்தா கோயில் பூசாரியை
சிதம்பரம் கோயிலுக்கும்
டிரான்ஸ்பர் செய்ய தயாரா?

ஒரு குலத்துக்கு ஒரு நீதி
என்பது தான் பர்ப்பனியம்
ஒரு வர்கத்துக்கு ஒரு நீதி
என்பது தான் மறுகாலணியம்!

பன்னாட்டு கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி
பஞ்சமனும், சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி!

முறியடிப்போம்! முறியடிப்போம்!!
பார்ப்பன மதவெறி கும்பலை
முறியடிப்போம்!முறியடிப்போம்!!
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி தேச துரோக கும்பலை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!!

Wednesday, October 24, 2007

கம்யூனிசம்: ஒரு பகிரங்க விவாதம்

கம்யூனிசம் மட்டுமே உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒரே தீர்வு

முதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்க வல்ல ஒரே பாதை கம்யூனிசப் பாதை மட்டுமே. சோசலிசம் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) என்பது கம்யூனிசத்தை நோக்கிய முதல் சமூக கட்டுமானம்.சோசலிச சமூகத்தில் அனைவரும் உழைக்க வேண்டும், சமூக வளர்சிக்கு ஒவ்வொருவரும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. முதலாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் அவர்களும் உழைத்தே ஆக வேண்டும், உழைக்காமல் வாழ முடியாது. சோசலிச சமுதாயத்தில் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. சோசலிச உற்பத்தி மக்களின் தேவைக்கேற்ப இருக்கும், முதலாளித்துவ உற்பத்தி லாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கிறது. உண்மையான மக்களாட்சி சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம். வலைப்பூவில் சிலர் கம்யூனிசம் தேல்வி அடைந்து விட்டதாக எழுதியதை வாசிக்க நேர்ந்தது, ஆதலால் இந்த பதிவை எழுத வேண்டிய சூழலில் உள்ளேன்.சீனாவிலும், ரஷ்யாவிலும் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதா? இது ஒரு பின்னடைவு மட்டுமே. லெனின் இதுபற்றி கூறுகையில் ரஷ்யாவை சுற்றி அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் உள்ளது, ஆகையால் சோசலிசம் எப்போதும் அழிக்கப்படலாம் என்கிறார். அதற்கேற்றவாறு அமெரிககா போன்ற 14 முதலாளித்துவ நாடுகள் அதன் மீது போர் தொடுத்தன அதை ரஷ்யா எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இராணுவ ரீதியில் வெல்ல முடியாத இந்த நாடுகள் ரஷ்யா முழுவதும் உளவாளிகளை உடுருவ செய்தன, உளவாளிகள் கட்சியின் மத்திய கமிட்டி வரையிலும் உடுருவி இருந்தனர். ரஷ்ய மக்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் முயற்சியிலும் அந்த நாடுகள் ஈடுபட்டன. ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருஷேவ், கோர்பஷேவ் , எல்சின் முதலானவர்கள் மார்க்சின் தத்துவத்திற்கு நேரெதிராக முதலாளித்துவம் ஒழிந்துவிட்டதாக காரணம் கூறி வர்க்க போராட்டத்தை கைவிட்டனர், அவர்களின் தவறால் சோசலிசம் அங்கு பின்னடைவை சந்தித்தது. முதலாளித்துவ நாடுகளின் சோசலிசம் தகர்ந்துவிட்டதென்ற பொய் பிரச்சாரமும் ஒரு காரணம்.சோசலிச நாடுகளே இல்லையென்பதால் கம்யூனிசம் தோல்வியுற்றுவிடுமா? எப்போது சுரண்டலும், முதலாளித்துவம் ஒழிக்கப்படுகிறதோ அது வரை கம்யூனிசத்தின் தேவை இன்றியமையாததாகிறது. முதலாளித்துவத்தின் விதியான உழைப்புச் சுரண்டலும், ஏகாதிபத்தியமும் ஒழிக்கப்படும் வரை இந்த வர்க்கப் போராட்டம் ஓயாது. மார்க்ஸ் குறிப்பிட்டது போல முதலாளித்துவத்தில் ஏகாதிபத்தியங்கள் தனக்கு கீழே உள்ள காலனி நாடுகளையும், பெருமுதலாளிகள் சிறுமுதலாளிகளையும், சிறுமுதலாளிகள் உழைக்கும் மக்களையும் சுரண்டுகின்றனர், சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை. சுரண்டப்படும் வர்க்கம் இதனை எதிர்த்து போராடுவது இயல்பே.தற்போதுள்ள சூழலில் நேரடியாக காலனியாதிக்கம் செய்ய முடியாத நிலையில் முதலாளித்துவ நாடுகள் காலனிய ஓப்பந்தங்கள், கலாச்சார சீரழிவுகளின் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளை இப்படிதான் மறுகாலனியாதிக்கத்தை நடைமுறை படுத்துகின்றன.முன் எப்போதும் இல்லாத அளவில் முதலாளித்துவ வர்கத்திற்கும் பாட்டாளி வர்கத்திற்குமான இடைவெளி அதிகரித்து உள்ளது, இது மக்களை சோசலிசத்தை நோக்கி செல்ல வழிவகுக்கிறது. மக்கள் சோசலிசம் நோக்கி திரண்டு போராடுவதை தடுக்கவே WSF, NGOs, ASF போன்ற அமைப்புகள் அமெரிக்காவால் உலகம் முழுவதும் நிறுவப்படுகிறது. இந்த அமைப்புகள் உழைப்பவர்களை ஒன்று படவிடாமல் பிரிக்கின்றன(தலித்துகள், பெண்கள் என்று தனித்தனியாக பிரிக்கின்றன). முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் உழைக்கும் மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாது.


குறிப்பு : சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை, முதலாளித்துவத்தை தூக்கியெறியாமல் சுரண்டலையும் வறுமையையும் ஒழிக்க முடியாது. இதை கம்யூனிசத்தால் மட்டுமே சாதிக்க முடியும். இதில் வேறு கருத்து உடையவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க தயாராகவே இருக்கிறேன். உங்கள் மாற்று வழியுடன் விவாதிக்க தயாரா?

விவாதம் :

தமிழ்மணி said...

விவாதிக்கலாமே!எங்கே விவாதிக்கலாம்?

October 22, 2007 12:20 PM

ஆசாத் said...

இந்த வலைபூவில் கூட விவாதிக்கலாம்

October 22, 2007 9:46 PM

தமிழ்மணி said...

என் கேள்விகளை என் பதிவிலும் எழுதியிருக்கிறேன்உங்கள் பதிவிலும் எழுதுவேன்.

1) கம்யூனிஸ அமைப்பில் கார்கள் இருக்குமா?
October 23, 2007 5:32 AM

ஆசாத் said...

கார்கள் இருக்கும்

October 23, 2007 5:36 AM

தமிழ்மணி said...

கார்கள் இருக்கும் என்றால், கார்களை ஓட்ட சாலைகள் வேண்டும். கார்களை ஓட்ட சாலைகள் இருந்தால், கார்கள் இடது புறம் போகவேண்டுமா வலது புறம் போகவேண்டுமா என்பது போன்ற சட்டங்கள் இயற்றப்படவேண்டும். சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்றால், யாராவது அவற்றை இயற்றவேண்டும். (மக்களோ மக்கள் பிரதிநிதிகளோ) இது சட்டசபையாக (எந்த வடிவத்திலோ) வந்துவிடும்.சாலைகள் இருந்தால் விபத்துகள் இருக்கும். விபத்துகள் இருந்தால், யாருடைய குற்றம் என்று விசாரிக்க நீதிமன்றம் வேண்டும். குற்றம் என்று வந்துவிட்டால் தண்டனை என்பதும் வேண்டும். தண்டனையை நிறைவேற்ற போலீஸ், ஜெயில் எல்லாம் வேண்டும்.கார் ரிப்பேர் ஆகிவிட்டால் கார் ரிப்பேர் பண்ண ஆள் வேண்டும். கார் மெக்கானிக் எல்லோரும் ஒரே மாதிரியான திறமை உடையவர்கள் அல்ல. ஒரு கார் மெக்கானிக்குக்கு மவுஸ் ஜாஸ்தி ஆகும். அவருக்கு ஏராளமாக வரும் ஆர்டரை எல்லாம் அவரே ரிப்பேர் பண்ண முடியாது. ஆனால், அவர்தான் ரிப்பேர் பண்ணவேண்டும் என்று மக்கள் கேட்டால், "எல்லோரும் எல்லாமும் பெறக்கூடிய கம்யூனிஸம்" எங்கே இருக்கும்?

October 23, 2007 7:13 AM

ஆசாத் said...

கம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். அரசின் அங்கங்களான சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்றவை ஏதாவது ஒரு வர்கத்தை(முதலாளி, பாட்டாளி) ஒடுக்குவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன. வர்கங்கள் ஒழிந்த பின்பே கம்யூனிசம் மலர்வதால் அவை தானாகவே உதிர்ந்து விடும். கம்யூனிசத்தை நோக்கிய முதல்படி சோசலிசம், அதுவே பாட்டாளி வர்க்க சர்வதிகாரமாகும். இந்த சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் நீக்கப்பட்டு கம்யூனிச சமூகம் நிறுவப்படும். கார் ரிப்பேர் ஆகிவிட்டால், முறையான பயிற்சி அளிக்கப்பட்ட மெக்கானிக்குகள் இருக்கும் சோசலிச சமுகத்தில் ஒரே மெக்கானிக்கிடம் செல்ல வேண்டியிருக்காது. ஒவ்வொருவருடைய தனிச்சிறப்பை கண்டறிந்து, அந்த துறையிலேயே பயிற்சியளிக்கப்படுவதால் அனைவரும் சிறப்பாக செயல்படுவார்கள்.
October 23, 2007 8:37 AM

தமிழ்மணி said...

//கம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். //

கம்யூனிஸ அமைப்பில் சாலையில் விபத்துகள் நடந்தால் என்ன செய்வீர்கள்?
October 23, 2007 10:31 AM

தமிழ்மணி said...

ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம். சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?
October 23, 2007 10:46 AM

ஆசாத் said...

தமிழ்மணி,நீங்கள் கேட்கும் கேள்வி கம்யூனிச சமூகத்திலா அல்லது சோசலிச சமுகத்திலா? இரண்டுக்குமான வேறுபாடுகளை அறிவீர்கள் என நினைக்கிறேன். எந்த சமூகத்தில் என்பதை உறுதிபடுத்துங்கள்
October 24, 2007 2:29 AM

தமிழ்மணி said...

நான் கேட்பது கம்யூனிஸ அமைப்பில்தான். சோசலிஸ அமைப்பில் அல்ல.கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?நன்றி
October 24, 2007 5:39 AM

ஆசாத் said...

சோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர். மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.
October 24, 2007 6:14 AM


ஜமாலன் said...

தோழர் உங்கள் இறுதி பதிலை அவரது விவாதத்தில் விட்டுவிட்டார். //கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?//கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது. மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள். வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும். அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது. அல்லது கடவுள் படைக்கம்போதே ஆரசன் அடிமை என்று இரண்ட மனிதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அவர் ஒன்ற படைத்தாராம்? அன்றே ஒருவரை ஒருவர் இன்றுபோல் காலை வாருவது உயர்வு தாழ்வு பார்ப்பது சுரண்டுவது என்கிற வர்க்க அமைப்பாக இருந்தால் குறைவான மக்களைக் கொண்ட அந்த சமூகம் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்திருக்கும். இப்ப யாரும் இங்கு வந்து அணாணியாகி ஜோக் அடித்துக் கொண்டு சைபீரியா என சல்லி அடித்துக் கொண்டிருக்க முடியாது. நன்றி.
October 24, 2007 6:49 AM

தமிழ்மணி said...

//சோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர்.//

அப்படியே வைத்துக்கொள்வோம். அதாவது சோசலிஸ சமுதாயத்தில் உருவான விதிகளை தொடர்ந்து பின்பற்றுவீர்கள்.// மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.//

எந்த விதிமுறைகளின் தேவை இருக்காது? புதிய விதிமுறைகளின் தேவை இருக்காதா? பழைய விதிமுறைகளின் தேவை இருக்காதா? //மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.//

கருத்துவேறுபாடு இல்லாத மக்களா? ஒரு முதியவருக்கு 30 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் சாலையில் வண்டிகள் ஓட்டக்கூடாது என்று தோன்றலாம். ஒரு இளையவருக்கு 90 கிலோமீட்டருக்கு மேல் வண்டிகள் ஓட்டலாம் என்று தோன்றலாம். இதற்கும் வர்க்கத்துக்கும் என்ன சம்பந்தம்?
October 24, 2007 7:06 AM

தமிழ்மணி said...
நன்றி ஜமாலன்,இல்லையே. அவரது பதிலையும் எழுதி அதற்கு என் பதிலும் எழுதியுள்ளேனே?

நன்றி


செம்பியன் பரிதி said...

எனக்கும் சில கேள்விகள் உள்ளது

1,நீங்கள் இந்தியாவை எப்படி பார்க்கிறீர்கள் ?

2,இந்தியாவில் எப்படி புரட்சி செய்வீர்கள் ?

3,மருதையன் பார்ப்பன கண்ணோட்டத்தில் இல்லை என்பதை எப்படி நம்புவது ?

4,உங்கள் அமைப்பிலுள்ள முக்கிய நபர்கள் அனைவருமே பார்ப்பனர்களாகஇருக்கும் போது நீங்கள் தமிழர்களின் விடுதலையை பற்றி பேசுவதை எப்படி நம்புவது ?

5,தமிழ் தேசிய இனம் பற்றி உங்கள் கருத்து என்ன ?என்னுடைய கேள்விகள் உங்கள் மனதை புன்படுத்தும் நோக்கமுடையன அல்ல எனது அய்யங்களை தெளிவு படுத்திக்கொள்ளவே இவற்றை முன் வைத்துள்ளேன் இன்னும் பலகேள்விகள் உள்ளது தொடர்ந்து விவாதிப்போம்.

நன்றிசெம்பியன் பரிதி

October 24, 2007 8:14 AM

பாவெல் said...

தமிழ்மணி கம்யூனிசத்தை தர்க்க அடிப்படையில் விவாதிக்க வக்கற்றுபோய் சிலர் உங்கள் தளத்தில் அவதூறு செய்து மன நோயாளிகளைப்போன்று புலம்பித்திரிகிறார்கள். நீங்கள் இங்கு விவாதித்துக்கொண்டேஇன்னொரு பக்கம் அதை அனுமதிப்பது சரி அல்ல அவர்களுக்கு துணிவும்நேர்மையும் இருந்தால் இங்கு வந்து விவாதிக்கட்டும் அவர்கள் இவ்வாறுசெய்வதை தடுத்து இது சரி அல்ல நாம் விவாதிக்காமல் இப்படி முடிவு செய்யக் கூடாது என்பதை நீங்கள் தான் முறையாக சொல்லியிருக்கவேண்டும் நீங்கள் அதை செய்யாததால் தான் நான் இதை சுட்டிக்காடுகிறேன்.உடனடியாக அந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவதூறுகளை அழியுங்கள்அவர்களை இங்கு வரச்சொல்லுங்கள் இல்லை எனில் இங்கு விவாதிப்பதில்அர்த்தமே இல்லை !
October 24, 2007 8:49 AM

ஆசாத் said...

தமிழ்மணி,

நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு. கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது, மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது. அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள். நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.
October 25, 2007 2:02 AM

ஆசாத் said...

தோழர் ஜமாலன்,தமிழ்மணியின் கேள்விக்கு நான் சுறுக்கமான பதிலை தந்திருந்தேன், விரிவாக பதில் த்ந்தமைக்கு நன்றி

October 25, 2007 2:04 AM

ஆசாத் said...

தோழர் பாவெல்,நன்றி,உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன், ஒருபுறம் விவாதம் நடக்கையில் மறுபுறம் அவதூறுகளை தமிழ்மணி அனுமதிப்பதை கண்டிக்கிறேன்.
October 25, 2007 2:07 AM

ஆசாத் said...

தமிழ்மணி,விவாதம் என்ற போர்வையில் நீங்கள் செய்யும் அவதூறு பிரச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன் இது விவாதிக்கும் முறையே இல்லை. இந்த அரைவேக்காட்டு தனமான கருத்துகளை அனுமதிப்பது விவாதத்தை அவமதிப்பதாகும். அவதூறு பரப்பும் கேழைகளே துணிவிருந்தால் என்னுடன் விவாதம் செய்ய தயாரா?
October 25, 2007 2:14 AM

ஆசாத் said...

செம்பியன் பிரிதி,
உங்களுக்கான எனது பதில்,

1.இந்தியா ஒரு தேசமே இல்லை, இது பூணுலால் கட்டப்பட்டது. இந்து-இந்தி-இந்தியா

2.ரஷ்ய பாணியில் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சிப் பாதை இந்தியாவில் சாத்தியமில்லை இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் புரட்சி ஏற்படுத்துவது சாத்தியமில்லை. நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்கிற வழிமுறைகளின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

3.மருதையன் ஒரு கம்யூனிச தோழர், அவர் பிறப்பால் பார்ப்பன சாதியை சேர்ந்தவர் என்பதால் அவர் மாறமுடியாது என்பது இயங்கியல் அடிப்படையில் தவறான கருத்தாகும். அவரை மதிப்பிடுவது அவருடைய செயல்பாடுகள்,எழுத்து போன்ற நடைமுறையில் மட்டுமே இருக்க வேண்டும்.

4.மூன்றாவது பதில் இத்ற்கும் பொருந்துமென எண்ணூகிறேன்.

5. வர்க்கப் போராட்டம் என்பது வர்கம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.உங்களின் ஆரோக்கியமான விவாதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வேறு விவாதம் நடப்பதால் சுறுக்கமான பதிலையே மேலே தந்துள்ளேன். உங்களை நேரில் சந்தித்து விவாதிக்கலாமா? உங்களை தொடர்பு கொள்ள முகவரியோ, தொலைபேசி எண்ணோ கொடுக்கவும்.

October 25, 2007 2:32 AM

தமிழ்மணி said...

என் பதில்
உங்கள் பதிலுக்கு நன்றி நண்பர் ஆசாத்,

//நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு.//

நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும்? அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா? அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா? கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா? இதுதான் கேட்பது.

//கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது,மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது.//

அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள்.

//அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள்.//

// நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.//

அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதே?மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்?
நன்றி
October 25, 2007 8:18 AM

செம்பியன் பரிதி said...

நேரில் சந்தித்து விவாதிக்க நானும் ஆர்வமாகத் தான் இருக்கிறேன் நான் சென்னையில் இருக்கிறேன்நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ?உங்களை சந்திக்க வேண்டுமானால் எங்கே வர வேண்டும் ?உங்கள் முகவரியையும்அலை பேசி எண்னையும் தந்தால்நானே நேரில் வந்து சந்திக்கிறேன்.நன்றி ஆசாத். செம்பியன் பரிதி
October 25, 2007 11:18 PM

ஆசாத் said...

செம்பியன் பரிதி,

மகிழ்ச்சி, நான் சென்னையில் இல்லை, கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.தேழர்கள் பேசுவார்கள்
முகவரி:
முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.

அலைபேசி : 9941175876, 23718706.

வரும் நேரத்தை தெரியப்படுத்தவும்.

October 26, 2007 12:23 AM

ஆசாத் said...

தமிழ்மணி,

//நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும்? அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா? அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா? கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா? இதுதான் கேட்பது.//

நான் இதைத்தான் இவ்வளவு முறையாக கூறுகிறேன். கம்யூனிஸ சமூகத்தில் எந்த விதிமுறைகளும் இருக்காது. ஒரு கேள்வி: விதிமுறைகள் எதற்காக யார் உருவாக்குகிறார்கள்?

//அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள். //

//அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதே?மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்?//

ஆம் தன்னிச்செய்யாக செயல்படுவார்கள், அப்போது இருக்கும் மனிதர்கள் அறிவியலிலும், சிந்தனையிலும் பல மடங்கு முன்னேறி இருப்பார்கள். விதிமுறைகள் தேவையில்லை. உங்களுடைய விட்டில் எச்சில் துப்பாமல் இருக்க என்ன விதிமுறை இருக்கிறது? நீங்கள் உங்களுடைய நடு விட்டில் எச்சிலை துப்புவீர்களா?
October 26, 2007 12:38 AM

ஆசாத் said...

தமிழ்மணி,கருத்து என்றால் என்ன?
October 26, 2007 12:41 AM

தமிழ்மணி said...

//இதைத்தான் நானும் சொல்கிறேன், சோசலிச சமூகத்தில் மக்கள் பழகியிருப்பதால் விதிமுறைகள் தேவையில்லை. //

இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் "பழகியிருப்பதாக" நீங்கள் சொல்கிறீர்கள்.

//தமிழ்மணி நீங்க சின்ன வயசுல அதிகாரத்தால எச்சில் துப்பாமல் இருக்கலாம், பெரியவனான பிறகுமா அதிகாரம் பண்ணுராங்க, பாவங்க நீங்க. வர்க்கம் தோன்றிய காலத்தில் தான் விதிகள் தோன்றின, வர்க்கம் இல்லாத போது அதுவும் தேவையில்லை மேலும், அதிகாரம் இல்லாத மனிதக்குழு புராதண பொதுவுடமை சமூகத்தில் இருந்தது, குழுவாக வேட்டையாடி பகிர்ந்து கொண்டனர். பின் தங்கிய சமூகத்திலேயே இது சாத்தியப்பட்டிருந்தது, ஏன் முன்னேறிய சமூகத்தில் முடியாது? முன்னேக்கி பாருங்க. //

வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.

//அதிகாரம் என்பது ஒருவரை ஒடுக்கவே பயன்படுகிறது. ஒடுக்க வேண்டிய தேவையில்லாத சமூகத்தில் அது தேவையில்லை.உங்களிடன் தொலைநோக்கு பார்வை இல்லையென்றே கருத வேண்டியுள்ளது. ஒரு முன்னேறிய சமூகத்தை பற்றி விவாதிக்கும் போது இப்போதுள்ள சூழ்நிலையை ஒப்பிடுவது சரியா? நீங்க மறுத்தாலும் உங்க விவாதத்தில் அது நன்றாகவே தெரியுது.26. Oktober 2007 08:32//

இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.நன்றி
October 26, 2007 8:50 AM


ஆசாத் said...

தமிழ்மணி,

//இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் "பழகியிருப்பதாக" நீங்கள் சொல்கிறீர்கள்.//

நான் உதாரணத்தோடு கூறியும் தக்க காரணம் சொல்லாமல் மறுப்பது விவாதமல்ல. நீங்கள் உங்களுடைய முடிவை திணிக்கின்றீர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உங்களை வீட்டில் அதிகாரம் செய்வதில்லை ஆனாலும் நீங்கள் வீட்டில் எச்சில் துப்புவது கிடையாது, ஏன்? அது உங்கள் வீடு என்ற பொறுப்புணர்வு கிடையாதா? தினமும் பல் துலக்குவதும் விதிமுறைக்காகத்தானா? அது ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது இல்லையா? உங்கள் உடலின் மீதுள்ள பொறுப்பில்லையா?

//வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.//

பகிர்வது கூட ஒரு விதியா? அதில் அனைவரின் உழைப்பு இல்லையா? அது அவர்களின் உரிமையில்லையா? இதில் எங்கே விதிமுறை வந்தது? நீங்க் சொல்லும் விதிமுறை என்பது தான் என்ன? கம்யூனிசத்திற்கு தவிர்த்து உங்கள் மாற்று வழிதான் என்ன?

//இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.//

அப்ப விதிமுறை இல்லாம வாழ முடியாது? இதுவரை (புராதண பொதுவுடைமை சமூகத்தில்) விதிமுறை இருந்தது என்று சொல்லும் போது அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், எதிர்காலத்திலும் விதிமுறை இருக்கும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும்?விவாதிக்கச் சொன்னா நீங்க உங்க முடிவை திணிக்க முயற்ச்சிக்கைறிங்க.
நன்றி.

Thursday, October 18, 2007

இராமன் பாலம் கட்டினானா?

கடந்த சில வாரங்களாக பார்ப்பன கும்பல் இராமர் கடலுக்கு அடியில் பாலத்தை கட்டி உள்ளான் அதனை இடிக்கக் கூடாது என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றன. இராமர் பாலத்தை இடிப்பதால் இந்துக்களின்(பார்பான்) மனது புண்படும் என்று இந்த மதவெறி கும்பல் புலம்புகிறது. நமக்கு ஒரு சந்தேகம் எழலாம், இராமன் என்ன அறிவில்லாதவனா அவன் எதற்காக கடலுக்கு அடியில் பாலம் கட்டினான். அப்படியே பாலம் நீரில் மூழ்கிவிட்டது என்றே வைத்திக்கொண்டாலும் அதன் சிதிலமடைந்த பகுதிகள் எங்கே, தொல்லியல் துறையின் ஆய்வில் கூட அப்படி எதையும் காண முடியவில்லையே.திருமாலின் அவதாரமான சர்வ வல்லமை படைத்த இராமன் கட்டிய பாலம் எப்படி மூழ்கியது,மனித பிறவியான கரிகாலன் கட்டிய கல்லனை கூட இன்னும் நிற்கிறதே.
வால்மீகி இராமாயணத்தை ஆதாரமாக ஏற்றுக்கொண்ட பார்ப்பன் நீதிமன்றம் பாலம் இருப்பது உண்மை அதனை இடிக்கக் கூடாது என்ற இடைக்காலத் தடையை விதித்தது.தொல்லியல் துறையின் ஆய்வை ஏற்காத நீதிமன்றம் இந்த ஒரு புராண புரட்டை ஏற்கிறது என்றால், அதன் பார்பன பற்றையும் மனுதர்மத்தை நிலைநாட்டும் வெறியையும் நாம் உணரமுடியும். வால்மீகி இராமாயணத்தை பொறுத்தவரை இராமன் 17 1/2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டினானாம். அட அறிவு கெட்டவனுங்களே மனித இனம் தோன்றியதே 5000 ஆண்டுகளுக்கு முன்பு தானே, அப்படினா இராமன் என்ன ஒரு செல் உயிரியா? 5000 ஆண்டுகளுக்கு முன்புகூட தற்போதைய இலங்கையும் தமிழகமும் நிலப்பரப்பால் இணைந்தே இருந்தது, அப்படியிருக்க பாலம் கட்டிய இராமன் என்ன லூசுப் பயலா?
இராமன் பாலம் கட்டின விதம் இன்னும் காமடியானது, குரங்கும் அணிலும் கல்லெடுத்து கொடுக்க அவன் பாலம் கட்டினானாம். அடடே நம்ம இராமன் என்ன குரலிவித்தைக் காரனா? அவன் அப்பவே குரங்கை வைத்து வித்தை காட்டியிருக்கிறானே. குரங்கும் அணிலும் கல்லை எங்கிருந்து கொண்டுவந்தன, அந்த சுத்து வட்டாரத்துல எங்கயும் பாறைகளே கிடையாதே.
இராமனை இந்த பார்பன மதவெறி கும்பல் உயர்த்தி பிடிக்க காரணமென்ன? இராமன் வருணாசிரம கொள்கையை கடுமையாக நடைமுறைப் படுத்திய (அவாளின்) காவிய நாயகன். இராமனை நாயகனாக்குவதன் மூலம் இந்த பார்பன கும்பல் வருணசிரம கொள்கையை மக்களின் மீது திணிக்க முயல்கிறது. இந்து மதம் என்பது பார்பன மதம், உச்லகத்திலேயே இந்த மதத்தில் மட்டும் தான் மனிதனை மனிதன் தொடுவது தீட்டு என்றும் தொட்டால் குளிக்க வேண்டும் என்றும் போதிக்கிறது. மாட்டு (கோமாதா) மூத்திரத்தை குடிக்கும் இந்த சுத்த சிகாமனிகள் சக மனிதனை தொடுவது தீட்டு என்று போதிக்கின்றது. பீயை (நரகல்) மிதித்தால் கூட காலை மட்டும் கழுவும் இந்த வெறியர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறப்படுவோரை தொட்டுவிட்டால் உடனே குளிக்கின்றன (கேடுகெட்ட விலங்குகள்).
இராமன் இருந்தது உண்மை என்றால், அவன் சூத்திரனான சம்புகன் பார்ப்பானை வணங்காமல் நேரடியாக இறைவனை வணங்கியதால் வெட்டிக் கொண்ற கொலைகாரன். வாலியை பேடியைப் போல மறைந்து நின்று அம்பெய்தி கொண்ற கோழை. சூர்ப்பனகை தன்னை ஆசை படுகிறாள் என்ற காரணத்தால் அவள் மூக்கையும், மார்பகத்தையும் வெட்டிய பொறுக்கி நாய். இராவணனை கொன்ற கொலைகாரன், சீதையை நெருப்பில் தள்ளிய சந்தேகக்காரன். ஆக இராமன் ஒரு பயங்கரவாதி, கொலைகாரன், பேடி என்றெல்லாம் நான் சொல்லவில்லை, சொல்வது வால்மீகி இராமாயணம். இராம அவதாரத்தின் நோக்கமே இராவண வதம் என்று வால்மீகி இராமாயணத்தில் முன்னுரையிலேயே குறிப்பிடபட்டுள்ளது. சீதையே பிறக்காத போது இராவணன் எதற்காக கொல்லப்பட வேண்டும், இதிலிருந்தே இது புணையப்பட்ட கதை என்பது உறுதியாகிறது. இராவணன் அசுரன் (தமிழன்), தென்னிந்திய திராவிட மக்கள்தான் அசுரர்கள் என்று இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமன் பாலம் கட்டவில்லை அப்படியே கட்டியிருந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை பயனற்றது குப்பை, அதை இடிப்பது பார்ப்பன குப்பையை அகற்றுவதாகும்.

இராமன் பாலம் என்பது புராண புரட்டு; பார்பன மதவெறி கும்பலை விரட்டு. இராமனுக்கு கல்லறையை தமிழகத்தில் கட்டுவோம்.

Tuesday, October 16, 2007

ஆசாத் என்ற மனிதன்

பிரிட்டிஷ் சர்க்காருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்படக்கூடும் என்று நாங்களும் நம்பினோ ம். அப்படியென்றால் இனி எங்களின் நிலைமை என்ன? நாங்கள் இனியும் போராடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? ஆங்கிலேயர்களுடன் உடன்படிக்கை என்பது ஆசாத்துக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சியாளர்களாக இருக்கும்வரை, அவர்கள் மீது குண்டு வீச்சைத் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் ஆசாத்தின் நிலை.  'மூட்டை முடிச்சுகளுடன் போய்வருகிறோம்' என்பது மட்டும்தான் அவர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் இதே கருத்துதான் நிலவியது. சித்தாந்த அடிப்படையில் நானும் சுரேந்திரனும் ஆசாத்தின் கருத்துக்கு உடன்பட்டோம்.

நான் சில வேளைகளில் ஆசாத்தை கிண்டலடிப்பதுண்டு: "பயப்படாதீர்கள், காங்கிரசும் பிரிட்டிஷ் அரசாங்கமும் உடன்பாடு கண்டுவிட்டால் நாம் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமிருக்காது. உங்கள் பெயர் மிகவும் பிரபலமாகிவிட்டது. இன்ஸ்பெக்டர் தொப்பியும் யூனிபார்மும் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதையாவது காங்கிரஸ்காரர்கள் புரிந்து கொள்ளாமலா இருப்பார்கள். உங்களுக்கு இன்ஸ்பெக்டர் போஸ்டு நிச்சயம் கிடைக்கும்"

இன்ஸ்பெக்டர் பதவிக்குத்தான் லாயக்கு என்று நான் சொன்னவுடனே ஆசாத் கிளர்ந்தெழுந்தார். "போடா கழுதை! போலீஸ் ஆபீசர் உத்தியோகமாம்! உனக்கெங்கடா கிடைக்கும்?". நான் கிண்டலைத் தொடர்வேன்: "நீங்கள் இன்ஸ்பெக்டராகிவிட்டால், பிறகு எங்களுக்குச் சிபாரிசு செய்யாமலா இருப்பீர். நான் குறைந்தபட்சம் ஒரு சப்-இன்ஸ்பெக்டராகவாவது ஆவேன்"

ஆசாத்திடம் நேரிலும், அவருடைய நெருங்கிய சகா பகவந்தாஸ் மகெளர் தலைமறைவுக் காலத்தில் ஷெல்டர் (அடைக்கலம்) அளித்த மாஸ்டர் ருத்ர நாராயண்ஜி போன்றவர்களிடமிருந்தும் தெரிந்து கொண்ட தகவல்களின்படி ஆசாத் மத்திய இந்தியாவில் சாடுவா தாலுக்காவில் பாவரா கிராமத்தில் தான் பிறந்தார். அன்றைக்கு இந்த கிராமம் அலிராஜ்கபூர் என்ற சமஸ்தானத்தில் இருந்தது. ஆசாத்தின் தகப்பனார் பெயர் பண்டிட் சீதாராம் திவாரி; தாயார் பெயர் ஜெக்ராணி தேவி. திவாரியின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. எனவே தன்னுடைய மைத்துனர்களான சிவானந்தனுடனும், ராமபிரசாத் மிஸ்ராவுடனும் வசித்து வந்தார். தாராள மனப்பான்மை மிக்க பக்தி நிஷ்டை மிகுந்த ஒரு பிராமணராக இருந்தவர் அவர். தீட்சண்ய குணம் படைத்தவரும் யாருடைய பேச்சுக்கும் கட்டுப்படாதவராகவும் இருந்தார். ஏதோ ஒரு விஷயத்துக்காக சண்டையிட்டு உன்னாவிலிருந்து அலிராஜ்கபூருக்கு வந்தார். அங்கு ஒரு தோட்டத்தின் பாதுகாப்புப் பணியை எட்டு ரூபாய் சம்பளத்திற்கு மேற்கொண்டிருந்தார். அந்தக்காலத்தில் சம்பளம் என்பதெல்லாம் இவ்வளவுதான் வழக்கிலிருந்தது. உணவு பண்டங்கள் துணிமணிகள் எல்லாம் விலைமலிவாக கிடைத்தன.

குழந்தைப் பருவத்தில் ஆசாத் 'நல்ல பையனாகத் தான்' இருந்தார். தின்பதிலும் விளையாடுவதிலும் தீராத ஆர்வம் கொண்டிருந்தார். வெல்லம் தின்பதென்றால் அவருக்குக் கொள்ளை ஆசை. விளையாட்டுத் துப்பாக்கியால் நாட்டுவெடிப் பொருட்களை நிரப்பிச் சுடுவதுதான் பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால் இந்த விளையாட்டுக்குப் போதுமான பணம் கிடைக்கவில்லை. ஒரு நாள் தோட்டமே தனக்கு சொந்தம் என்ற தோரணையில் ஏராளமாகப் பழங்களைப் பறித்து வெல்லத்திற்காகவும், நாட்டுவெடிப் பொருட்களுக்காகவும் விற்றுவிட்டார். தந்தையின் பார்வையில் அது மன்னிக்க முடியாத குற்றமாகும். தகப்பனார் மகனைத் தாறுமாறாக அடித்துவிட்டார். பார்த்துக் கொண்டிருந்த தாயாரின் உள்ளம் உருகியது. ஆசாத்தின் தன்மானம் தொடர்ந்து அங்கு வசிக்க அவரை அனுமதிக்கவில்லை. கல்வி கற்க வேண்டுமென்ற அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்தது. தாயார் மிகவும் சிரமப்பட்டுச் சேமித்து வைத்திருந்த பதினோரு ரூபாய் பணத்தை மகனுக்குக் கொடுத்தார். ஆசாத் கல்வி மையமான காசி நகருக்கு ஓடிப்போய்விட்டார். அங்கு அமரம், லெகுகௌமுதி போன்றவற்றை உருவிவிட்டுக் கொண்டிருந்தபோது காங்கிரசின் சட்ட மறுப்பு இயக்கத்தால் கவரப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதிமூன்று அல்லது பதினான்கு இருக்கலாம்.

காங்கிரசின் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து முதன் முதலாகக் கைது செய்யப்பட்டபோது கைவிலங்கின் வளையங்களுக்குள்ளிருந்து உருவக்கூடியதாக மிகவும் மெலிதாக இருந்தன அவருடைய கைகள். விலங்கிலிருந்து கைகளை உருவிப் போலீசாருக்கு ஆசாத் போக்குக் காட்டி அவர்களை ஏமாளிகளாக்கினார். அதன் விளைவு இரண்டு கைகளையும் ஒரே வளையத்திற்குள் நுழைத்து விலங்கிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! கோர்ட்டில் மாஜிஸ்ட்ரேட் ஏளனம் செய்தார்: "சுண்டைக்காய் அளவு கூட வளரவில்லை வந்து விட்டான் புரட்சி நடத்த! ஓடிப்போடா இங்கிருந்து!" இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஆசாத் மாஜிஸ்ட்ரேட்டைத் திட்டித்தீர்த்தார். அந்தச் சிறார் பருவத்திலே ஆசாத்தைச் சிறையில் அடைக்க முடியாது. எனவே பிரிட்டீஷ் சர்க்காரின் சட்டத்தைப் பேணுவதற்காக வரிந்து கட்டிக் கொண்டு செயலாற்றும் மாஜிஸ்ட்ரேட் சிறுவன் ஆசாதைச் சிறைக்கு அழைத்துச் சென்று பன்னிரெண்டு முறை பிரம்படி கொடுக்குமாறு தீர்ப்பளித்தார். இந்தத் தண்டனைக்குப் பிறகு சிறுவன் சரிப்பட்டு விடுவான் என்று மாஜிஸ்ட்ரேட் எண்ணியிருப்பார்.

கோர்ட்டு உத்தரவுப்படியான பன்னிரெண்டு பிரம்படியின் 'மகாத்மியம்' பலருக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. பள்ளிக்கூடத்தில் குறும்புத்தனம் செய்யும் மாணவனுக்களிக்கப்படும் 'பிரம்படி சிகிச்சை' தான் இது என்று யாரும் நினைக்க வேண்டாம். குற்றம் சாட்டப்பட்டவரை சிறைக்கு அழைத்துச் சென்று உடைகளை முழுவதும் அவிழ்த்து விடுவார்கள். பிறகு ஒரு முக்காலியுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு விடுவார்கள். முதுகிலும் பிருஷ்டத்திலும் மருந்து தேய்த்த துணியைப் பத்துப் போடுவதைப்போல் வைத்துப் பிரம்பைத் தண்ணீரில் முக்கித், துப்புரவுத் தொழிலாளிகளை விட்டு அடிக்கச் சொல்வார்கள். ஜெயிலர் எண்ணுவதற்கேற்பத் துப்புரவுத் தொழிலாளி கையை நீட்டிப் பிரம்பால் விளாசி விளாசி அடிப்பர். முதல் அடியிலேயே பிருஷ்டத்திலிருந்து ரத்தம் தெறிக்க ஆரம்பித்து விடும்; பதினான்கு வயது ஆசாத்துக்கு இவ்வாறுதான் பிரம்படி அளிக்கப்பட்டது. ஆசாத் என்ற சிறுவன் ஒவ்வொரு அடி விழும்போதும் 'இங்குலாப் ஜிந்தாபாத்' என்று கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தான்.

பிரம்படிபட்டு சிறையிலிருந்து வெளியே வந்த ஆசாத் முன்னைவிடப் பேரார்வத்துடன் போராட்டத்தில் குதித்தார். அப்போதுதான் காகோரி குழுவின் தோழர்களுடன் குறிப்பாக மன்மநாத் குப்தாவுடன் தொடர்பு ஏற்பட்டது. காகோரி குழுவின் புகழ் பெற்றதும் துணிச்சல் மிகுந்ததுமான ரெயில் கொள்ளையில் சர்க்கார் கஜனாவைக் கொள்ளையடிப்பதில் அவரும் பங்கேற்றிருந்தார், கைது செய்ய ஆரம்பித்ததும் ஆசாத் தலைமறைவாகி விட்டார். சிறு பருவத்திலேயே அவர் மிகவும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் மிக்கவராக இருந்தார். எனவே தோழர்கள் அவரை கியூக் சில்வர்(ரசம்) உடன் ஒப்பிட்டனர். ராம பிரசாத்துடன் அவர் சில அரசியல் கொள்கைகளில் (மணி ஏக்சன்) பங்கேற்றிருக்கிறார். புரட்சிகரமான கொள்கைகளில் பெண்களின் மீது கை வைப்பதோ அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடிப்பதோ வழக்கமில்லை.

அவருடைய அன்றைய நிலைமையை வைத்துப் பார்க்கும்போது கல்வி என்றாலே சமஸ்கிருதம் கற்பதுதான். அதனால் கூட சமகால பொருளாதார சமூக அரசியல் வாழ்க்கையில் எத்தகைய பயனும் கிடையாது. ஒருமுறை அரசியல் உத்வேகம் பெற்றுவிட்டால் தேசத்தின் விடுதலைக்காகப் போராடுவதைத் தவிர வேறு மனத்தில் வாழ்க்கையின் பெரும்பேறே அன்னிய சர்க்காரின் கூலிப் போலீசாருடன் போராட்டக்களத்தில் மோதி உயிர்துறப்பதுதான்; கைது செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் சொந்தமாக வாதாடித்தான் போராடவேண்டியிருக்கும் என்பதைக்கூட அவர் நினைவிற்கொள்ளவில்லை. தெளிவான திடமான நோக்கமே போராடி உயிர் துறப்பதுதான் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் கோர்ட்டில் குரங்காட்டமாட என்னால் முடியாது என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு" எட்டுத் தோட்டாக்களுடைய பிஸ்டல் வத்திருக்கிறேன். அதேபோல் இன்னொன்றும் இருக்கிறது பதினைந்து தோட்டாக்களையும் எதிரியின் மீது ஏவுவேன். பதினாறாவது தோட்டா இங்கே பாயும்" என்று பிஸ்டல் குழாயை தன்னுடைய நெற்றிப் பொட்டில் வைத்து கூறுவார்.

அன்று எல்லா இடங்களிலும் பேசப்பட்ட உடன்படிக்கைப் பிரச்சனை ஆசாத்தை மட்டும் பதிக்காமல் இருக்குமா என்ன? ஒரு நாள் இரவில் அவர் கூறினார்: "காங்கிரஸ் இறுதியில் உடன்படிக்கை செய்து கொண்டால் நான் பேஷாவர் வழியாக நாட்டை விட்டு ஓடிவிடுவேன். வசீரிக்களுக்கும் அஃபரீதிக்களுக்கும் (எல்லை மாகாணங்களின் இரண்டு பிரிவுகள்) ஆங்கிலேயர்களுடன் ஓர் உடன்படிக்கை சாத்தியமற்றதாகும். அவர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுடன் போராடுவேன். சோகன், அத்தகைய சந்தர்ப்பங்களில் எவரும் தனிமையை நாடுவதில்லை. நீங்களும் பிரகாசவதியும் இணைந்தது நல்லதாகி விட்டது: வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையையும் பின்னிட்டுச் செல்ல, பெண்களும் ஆண்களும் ஒன்று சேர வேண்டும். நான் இனி இந்த விசயத்தை பற்றி யோசித்தால்கூட அத்தகைய பெண் எங்கிருக்கிறாள்? அக்காவை (சுசீலா) பார்க்கவில்லையா? தன்னம்பிக்கையான இனம். மூலையால் மட்டும் மனிதனால் என்ன செய்ய முடியும்? உண்மையில் அக்கா அசாதாரணமானவர்தான்.இருப்பினும் அது போதாது காங்கிரஸ்காரர்கள் ஆங்கிலேயர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டால் கூட, எல்லையைக் கடந்து வெளியேறிச் செல்லத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். "இருவர் தோள்களிலும் துப்பாக்கியிருக்க வேண்டும். ஒரு சாக்குமூட்டை நிறைய வெடிப் பொருட்கள் எடுத்துச் செல்லவேண்டும். எதிரிகள் எங்களை வளைத்துக் கொண்டால் அவள் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பித் தர வேண்டும். நான் 'பட் , பட்' என்று சுட்டுத் தள்ளிக் கொண்டிருப்பேன். இவ்வாறு இருவரும் உயிர் நீத்துவோம்".

புரட்சியாளர்களுக்குப் பிரம்மச்சரியம் தான் பொருத்தமானது என்று வெகுநாட்கள் வரை ஆசாத் பேசிக்கொண்டிருந்தார். பெண்ணின் 'ஈர்ப்பு' அழிவிற்கும் கஷ்டங்களுக்கும் காரணமாகி விடும். வேடிக்கையாக பெண்ணின் மறுபெயராக 'காந்தம்' என்ற சொல்லையே பயன்படுத்தினார். ஒரு காலத்தில் சமஸ்கிருதக் கல்வி தான் உண்மையான கல்வி என்று எண்ணி பிறகு அனுபவம் மற்றும் அறிவு வளர்ச்சியின் வெளிச்சத்தில் கருத்தை மாற்றிக்கொண்டதைப் போலவே, பெண்களைப் பற்றிய ஆசாத்தின் கருத்தும் பெருமளவிற்கு மாறியிருந்தது.

தன்னுடைய தலைமறைவு வாழ்கையில் பெருமளவு நாட்கள் ஜான்சியில் பிரபல சிற்பக் கலைஞரான மாஸ்டர் ருத்ரநாராயண்ஜியின் வீட்டில்தான் ஆசாத் தங்கியிருந்தார். அந்த வீட்டை அவர் பெருமளவு நம்பியிருந்தார். எனவே மாஸ்டர்ஜியின் விருப்பத்திற்கேற்ப ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள மாஸ்டர்ஜிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆசாத்தின் சிலை வடிக்க மாஸ்டர்ஜி விரும்பியதே அதற்குக் காரணம் அவர் சிலையை வடித்து அரிய செல்வத்தைப் போல் இன்றைக்கும் பாதுகாத்து வருகிறார்.

மனைவியைப் பொதுப் பணிகளில் பங்கேற்க அனுமதிக்காததால் மாஸ்டர்ஜி அடிக்கடி ஆசாத்திடமிருந்து வாங்கிக்கட்டிக் கொள்வார். ஜான்சியில் போலீஸ் மிகவும் எச்சரிக்கையாக இருந்ததால் செய்தி அனுப்பவும் ஏற்கவும் மாஸ்டர்ஜியின் இல்லத்தரசியையே ஏற்பாடு செய்தோம்.

ஆசாத் அவர்களின் புலமையைப் பற்றியும் சிந்தனைத்திறனைப் பற்றியும் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன். ஆசாத் இந்துஸ்தான் சமாஜ்வாதி பிரஜா தந்திரசேனா (இந்துஸ்தான் சோஷலிஸ்டு குடியரசுப்படை) என்ற அமைப்பின் சித்தாந்தத் தலைவர் இல்லை. அதன் படைப் பிரிவுத் தலைவர் என்பதே உண்மை. இந்துஸ்தான் சோஷலிஸ்டு ரிப்பப்ளிக் ஆர்மி (H.S.R.A) தலைமைத் தளபதியாக (கமாண்டர் - இன் - சீஃப்) இருந்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. புத்தகம் படிப்பதை விட பிறர் படிக்கக் கேட்டு புரிந்துக் கொள்வதில் திறன் பெற்றிருந்தார். கூரிய கேள்வி ஆற்றலும் அறிவாற்றலும் மிக்கவராக இருந்தார். அறிவுக் கூர்மையைப் போலவே அவருடைய குணமும் சரளமானது. எனவே முன் குறிப்பிடாத கட்டங்களில் நபர்களைப் புரிந்து கொள்வதில் சருக்கியிருக்கிறார். படைத்தளபதி என்பதால் தன்னுடைய உயிரை எதற்காக பலியிடுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாதவர் என்று எண்ணி விடாதீர்கள். சித்தாந்த துணையின்றி புரட்சி இயக்கம் முன்னேற இயலாது 'இந்துஸ்தான் சமாஜவாதி பிரோஜாதந்திரசேனா'வின் சித்தாந்த பகுதியை அதன் 'சமாஜ்வாதி' 'பிரஜாதந்திர' போன்ற ஓசைச் சொற்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம் இந்த அமைப்பின் சித்தாந்தபூர்வமான குறிக்கோளுடன் ஆசாத் பெருமளவு இரண்டறக் கலந்திருந்தார். அதற்காக உயிர் தியாகம் செய்வதில் அவருக்கு மகிழ்ச்சியே தவிர வேறில்லை.

1931ன் துவக்க விஷயங்களைத்தான் இது வரை கூறி வந்தேன். வட்டமேசை மாநாட்டில் ஏற்பட இருக்கும் உடன்படிக்கை தொடர்பான அபிலாஷைகளையும், ஐயங்களையும் பற்றி ஜவகர்லால் நேருவுடன் விவாதிப்பதற்காக ஆசாத் ஒருமுறை மோதிலால் நேருவையும் சந்தித்திருந்தார். மோதிலாலை அவர் அரசியல் அல்லது சித்தாந்த விஷயங்களுக்காகச் சந்திக்கவில்லை. மோதிலால் திறந்த மனம் படைத்தவர். காங்கிரஸ் இயக்க விஷயங்களை நேரடியாக கையாள்பவராக இருப்பினும், புரட்சியாளர்களுக்கு உதவுவதை சட்டத்திற்குப் புறம்பானதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. காகோரி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக சட்ட உதவியைக் கொண்டு செல்வதில் அவர் பெருமளவுக்குத் துணையிருந்திருக்கிறார். ஆசாத்தைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு மோதிலால நேருவே ஆசாத்தை நேரடியாகச் சந்தித்துப் பேச அழைத்திருக்கக்கூடும்.

ஆசாத்துடனான சந்திப்பைப்பற்றி ஜவகர்கலால் நேரு தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: "என்னைச் சந்திக்கத் தயாரான முக்கிய காரணம், நாங்கள் சிறையிலிருந்து விடுதலையானவுடன் சர்காருக்கும் காங்கிரசுக்கும் இடையே ஏதேனும் உடன்படிக்கை ஏற்படும் என்ற நம்பிக்கை சாமான்ய மக்களிடம் ஏற்பட்டதினால் தான். உடன்படிக்கை ஏற்படுமாயின் அவருடைய குழுவில் இருக்கும் ஆட்களுக்கும் ஏதேனும் அமைதி கிடைக்குமா என்றறிய அவர் விரும்பியிருந்தார். அப்போது தேசத்துரோகிகளிடம் போலத்தான் தங்களிடம் பழகுவார்களா? எல்லா இடங்களிலும் இன்றைய மாதிரியே கண்காணிக்கப்படுவோமா? அவர்களுடைய தலைக்கு விலை கூறப்பட்டுக் கொண்டேயிருக்குமா? அவர்களும் நிம்மதியாக தங்களுடைய பணியில் ஈடுபட முடியுமா? தனக்கும் நண்பர்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளால் பயனில்லை என்றும், அது வீண் என்பதை உணர்ந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் அமைதி வழிகளில் இந்தியா விடுதலை பெற முடியும் என்பதை அவர் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. எதிர்காலத்தில் எப்போதாவது ஆயுதப் புரட்சிக்கான சந்தர்ப்பம் வரலாம் என்றும் ஆனால் அது பயங்கரவாத நடவடிக்கையாக இராதென்றும் அவர் கூறினார்".

இதைப்பற்றி ஜவகர்லால் நேரு மேலும் தொடர்ந்தார்: " பயங்கரவாத நடவடிக்கைகளில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று ஆசாத்தின் வாயிலிருந்தே கேட்க முடிந்ததனாலும் பிறகு அதற்கு தடையங்கள் கிடைத்ததனாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் பழைய பயங்கரவாத ஊழியர்களெல்லாம் அகிம்சாவாதிகளாகவோ, பிரிட்டிஷ் சர்க்காரின் பக்தர்களாகவோ மாறிவிடுவார்கள் என்று இதற்குப் பொருளல்ல - ஆனால் இப்போது இவர்கள் பயங்கரவாதிகள் மொழியில் சிந்திக்கவில்லை. அவர்களில் பலருடைய சிந்தனைப் போக்கும் குறிப்பாக பாசிசமாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்".

நேருஜியின் சுயசரிதையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த மேற்கோளைப்பற்றி விவாதிக்கும் போது அந்தப் புத்தகம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இந்த நூல் பெரும்பாலும் 1934 அல்லது '36' ல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆசாத் அதற்குள் உயிர்பலியாகிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு அவருடன் மேற்கொண்ட இன்னொரு சந்திப்பைப் பற்றி நேருஜி எழுதவேயில்லை, நினைவில்லை என்று கூற முடியாது. 1938 ல் புவாலியில் நான் நேருஜியைச் சந்தித்த போது இதை நினைவூட்டினேன். 1937 ல் ஆங்கிலத்தில் இந்த நூலை முதன் முதலாக நைனி சிறையில் படித்தபோது என் மனதில் இது தட்டுப்பட்டது. குறிப்பாக எங்களுடைய சிந்தனைப்போக்கை அவர் பாசிசம் என்று அழைத்தாரல்லவா, நேருஜியுடன் ஏற்பட்ட சந்திப்புக்குப் பிறகு மேற்படி நிகழ்ச்சியைப்பற்றி அலகாபாத் அங்காடி அறைக்குள் ஆசாத் எங்களிடம் விளக்கினார்.அப்போது அவருடைய உதடுகள் கோபத்தால் துடித்துக் கொண்டிருந்தன். நேருவின் பெயரை ஒரு வசைச்சொல்லுடன் சேர்த்து அவை சொன்னார்: "......நம்மை பாசிஸ்டு என்கிறான்......." ஆசாத்தின் நோக்கம் நேருஜியை வசைபாடுவதல்ல. சிறு வயதிலிருந்தே அவருடைய நாக்கு நுனியில் இத்த்கைய வார்த்தைகள் இடம் பெற்றுவிட்டன. சீரியசாக இருக்கும்போதும் கோபப்படும்போதும் வசைச்சொற்களைப் பயன்படுத்தவே மாட்டார். பேசும்போது கவனக்குறைவால் சில நரகல் வார்த்தைகள் வந்து விழுந்துவிடும், அவ்வளவுதான். தானும் தன்னுடைய தோழர்களும், பயங்கரவாத நடவடிக்கைகளை வீணெனக் கருதுவதாக அவர் நேருஜியிடம் சொல்லியிருக்க மாட்டார். தாங்கள் பயங்கரவாதிகள் இல்லை, ஆயுதப் புரட்சிக்காக உழைப்பவர்கள் என்றுதான் கூறியிருப்பார். இந்த உண்மையை நேருஜியின் அடுத்த வாசகங்களில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம். "அமைதி வழியில் இந்தியா சுத்ந்திரம் பெற முடியும் என்று ஒப்புக்கொள்ள அவர் தயாரில்லை. எதிர்காலத்தில் எப்போதாவது ஆயுத்ப் புரட்சிக்கான சந்தர்ப்பம் வரலாம் .." பண்டித நேரு ஆசாத்தின் வார்த்தைகளில் எப்படி; பாசிச வாடையை கண்டுபிடித்தார் என்பது புரியவில்லை. பாசிசம் என்பது ஆட்சியை அடக்கி ஒடுக்குவதைச் சார்ந்த ஒரு திட்டமாகும். நாங்களோ ஆட்சி புரியவேண்டும் என்பதைப்பற்றி எப்போதுமே கனவு கண்டதில்லை. நேர்மாறாக ஆங்கில அரசின் அடக்குமுறைக் கொள்கையை அதாவது பாசிசத்தை எதிர்க்கத்தான் செய்தோம்.

ஆசாத்துக்கு ஆங்கிலம் பேச வராது. ஒரு வேளை நேருஜிக்கு ஆசாத்தின் வார்த்தைகள் புரியாமலிருந்திருக்கலாம். உடன்படிக்கை ஷரத்துக்களில் லாகூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகத்சிங் போன்றவர்களின் விடுதலைப் பிரச்சனையையும் காந்திஜி உட்படுத்த வேண்டும் என்பதைத்தான் நேருஜியுடன் பேசும்போது ஆசாத் முக்கியமாக முன் வைத்தார். இது ஆசாத்தின் வேண்டுகோள் மட்டுமல்ல பொதுமக்களின் விருப்பமும் கூட காந்திஜி அத்தகைய ஒரு நிபந்தனையை முன்வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நேருஜி முற்றாக நிராகரித்துவிட்டார்.

- யஷ்பால்.

நன்றி : யஷ்பால்

Friday, October 12, 2007

தாமரை டிவியின் "நேருக்கு நேர்" நிகழ்ச்சி - கலந்து கொள்பவர்கள்: ராமன் (அயோத்தி,உ.பி.) மற்றும் கிருஷ்ணன்(மதுரா,உ.பி.)

கிருஷ்ணன்: அடடே ராமனா! என்னப்பா இது..கப்பலே கவுந்திட்ட மாதிரி கன்னத்துல கைவச்சிக்கிட்டு உக்காந்திட்டே..
ராமன்: ஒனக்கு விசயமே தெரியாதா? நான் கட்டின பாலத்தை இடிக்கப்போறாங்களாம். பின்னே கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? சொல்லு.
கிருஷ்ணன்: நீ எப்ப பாலம் கட்டினே? கொஞ்சம் வெவரமா சொல்லு.
ராமன்: சீதையை நான் மீட்டு வருவதற்காக பாலம் கட்டினேனே!
கிருஷ்ணன்: என்னது? சீதையை மீட்கவா? ஒன் பொண்டாட்டி எங்கே போனா?
ராமன்: எப்பா! அது இப்போ பிரச்சினை இல்லை..பாலத்தை ஒடைக்கப் போறதுதான் பிரச்சினை..அதப்பத்தி பேசு.
கிருஷ்ணன்: அது கிடக்கட்டும் கழுதை.. சொல்லுப்பா..ஒன் பொண்டாட்டி எங்க போயிட்டா?
ராமன்: சும்மா அதையே நோண்டிக்கிட்டிருக்காத..ராவணன் கூடத்தான் போனாள். கடல் தாண்டி இலங்கையிலே இருந்த அவளை மீட்டுவரத்தான் பாலம் கட்டினேன்.
கிருஷ்ணன்: சரி..போவுதுன்னு விட்டுத்தள்ளியிருக்க வேண்டியதுதானே! என்ன எளவுக்குப் போய் கூட்டிட்டு வரணும்? சரி.. நீ அங்கே போறதுக்கு முன்னாடி அங்க பாலம் இருந்திருக்காதே? அப்பறம் எப்பிடி சீதையும் ராவணனும் இலங்கைக்குப் போனாங்க?
ராமன்: ராவணன் எல்லாம் அசுரனாச்சே..அவன் சீதையை இடுப்புல வச்சிக்கிட்டு பறந்து போயிட்டான்.
கிருஷ்ணன்: ஓகோ..அப்படியா! உன்கிட்டதான் 'எல்லை தாண்டிய பயங்கரவாதி' ஒருத்தன் கெடந்தானே..அனுமான். அவனைப் பறந்து போய் சீதையைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமுல்ல...
ராமன்: ஏனோ அப்ப எனக்கு இது தெரியல.. அதான் பாலம் கட்டி போக வேண்டியதாச்சுது. இப்ப பாரு.. அந்தப் பாலத்தையும் இடிக்கப்போறாங்களாம்.கிருஷ்ணன்: பாலம் இப்போ அங்க இருக்கா?
ராமன்: இல்ல.. அது தண்ணிக்குள்ள முங்கிருச்சு..
கிருஷ்ணன்: என்னய்யா நீ.. நீ கட்டுன பொண்டாட்டியோட ஒழுங்கா வாழ முடியல...நீ கட்டின பாலம் தண்ணில போயிருச்சு..ஒன் கோயில சாதாரண மன்னன் பாபரு இடிச்சிட்டான்... அப்ப என்ன மயித்துல நீ அவதாரம்னு சொல்றானுங்கன்னும் புரியல்...கழுத கிடக்கட்டும்... பாலம்தான் தண்ணில முங்கிடுச்சே...விட்டுத்தொலைக்க வேண்டியதுதானே.. அதனால எதாச்சும் பிரயோசனம் இருக்கா?
ராமன்: அது இருந்ததாலேதான் பல முனிவர்களும் ரிஷிகளும் அது மேல 15ஆம் நூற்றாண்டு வரைக்கும் இலங்கைக்குப் போனாங்க..அப்புறம் தண்ணில முங்கினாலும்...இன்னைக்கு அதை வச்சுதான் பிஜேபின்னு ஒரு கட்சி உயிர் பிழைக்க வேண்டிருக்கு..
கிருஷ்ணன்: கூமுட்ட மாதிரி உளராதே...15ஆம் நூற்றாண்டு வரைக்கும் அது இருந்துச்சுன்னா..என்னத்துக்குடா ராஜராஜ சோழன் கப்பற்படையை ஏவி ஈழத்தைப் பிடிச்சான்? பொடி நடையாப் போயி ராவி இருக்கலாமே!
ராமன்: அப்பிடில்லாம் நாஸ்திகமாப் பேசாதே.. அது இந்துக்களோட நம்பிக்கை!கிருஷ்ணன்: என்னது இந்துவா? அப்பிடின்னா என்னது? நம்ம 2 பேரோட அவதாரத்திலெ இந்த பேரை எங்கயாச்சும் கேட்டிருக்கயா?
ராமன்: அதெல்லாம் தெரியாது..வெள்ளைக்காரன் குடுத்த பேரு அது.
கிருஷ்ணன்: வெள்ளைக்காரனா? யாரு..வெள்ளையா இருப்பானே அந்தப் பலராமனா?
ராமன்: அவன் இல்ல..இது நம்மளல்லாம் விட பலசாலி இங்கிலாந்துக் காரன்..
..கிருஷ்ணன்: என்ன இழவோ கிடக்கட்டும்...விசயத்துக்கு வருவோம்..தண்ணில முங்கின பாலத்தை இடிச்சா என்ன? பேர்த்தா என்ன?
ராமன்: அது எப்பிடி? அங்கே 1000 வருசத்துக்கு பயன்படும் தோரியம் இருக்குதே!
கிருஷ்ணன்: ஓகோ..அப்பிடின்னா பேர்த்து தோரியத்த எடுத்தாலாவது பிரயோசனப்படுமே!
ராமன்: இல்ல..இல்ல.. நோண்டுனா தோரியம் கரஞ்சிடும்..
கிருஷ்ணன்: லூசு மாதிரி பேசாதே...கரஞ்சு போக அது என்ன கருப்பட்டி மிட்டாயா? அல்லது...பேர்க்காமலே தோரியத்தை நோண்டி எடுக்க அது என்ன புளியங்கொட்டையா? எந்தக் கூமுட்டப் பயலுக இப்பிடி ஒன்கிட்ட சொன்னாங்க?
ராமன்: விஸ்வ ஹிந்து பரிஷத் ஆட்கதான் சொல்றாங்க! தோரியத்தை நாம் எடுத்து வல்லரசாகிடக்கூடாதுன்னு அமெரிக்கா சதி பண்ணிதான் பாலத்தை ஒடைக்க சதி பண்ணுதுன்னு போன வாரம் சொல்லிருக்காங்க!
கிருஷ்ணன்: நீயும் அந்தப் பரதேசிப்பயலுக சொல்றத நம்பிக்கிட்டுக் கிடக்கே! ஏண்டா..அமெரிக்காவுல இருந்து டாலர் டாலரா நன்கொடை வாங்குற நாதாரிங்க 'அமெரிக்க எதிர்ப்பு' வேசம் கெட்டுறானுங்கன்னா அத நீயும் நம்புற..ஒன்னயும் போயி எங்க கூட அவதாரத்தில சேத்துருக்காங்களே அவங்களச் சொல்லணும்! ஆமா! தனுஷ்கோடியில இருந்து மன்னார் வரை பாலம் போட்டீங்களே! மண்டபத்தில இருந்து ராமேஸ்வரம் போறதுக்கு என்ன பண்ணுனீங்க?
அது கிடக்கட்டும்! உன்னை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன்.. பாலம் கட்ட ராமநாதபுரம் ஜில்லாவுக்கு போனப்போ அங்கே தமிழ் பேசுனவுங்களோட நீ எப்படி பேச முடிஞ்சுது? ஒனக்கு சமஸ்கிருதம் மட்டுந்தானே தெரியும்? யார் ஒனக்கு துவிபாஷி வேலை பார்த்தாங்க? அந்த ஜில்லாவுலே எங்கேயும் பாறை கிடையாதே..பாலம் கட்ட என்னடா பண்ணுனீங்க?
ராமன்: ??
கிருஷ்ணன்: பாலத்தக் கட்டி எத்தன வருசமாகுது?
ராமன்: பதினேழரை லட்சம் வருசமாகுது..
கிருஷ்ணன்: அப்படீன்னு யாரு சொன்னா?
ராமன்: ஜெயலலிதா..சே..சே..வால்மீகி..
கிருஷ்ணன்: ஆமா..5000 வருசத்துக்கு முன்னாடிதான் இந்தியாவிலேர்ந்து இலங்கைக்கு நடந்தே போக முடியுமே...கடல் மட்டம் தாழ்ந்துதானே கிடந்தது...அப்பறம் ஏன் பாலம் கட்டுனீங்க? நடந்தே போக முடியுற இடத்துக்கு பாலம் கட்டுனீன்னா ஒன்னை 'கூமுட்டப் பயல்'னு சொல்லாம வேறென்ன சொல்ல?
ராமன்: என்னைய மட்டும் இவ்வளவு நோண்டுறீயே! கண்ணகி மட்டும் உண்மையா? அவ மதுரைய எரிச்சது உண்மையா?
கிருஷ்ணன்: சோ ராமசாமி மாதிரி முட்டாத்தனமா உளராதே...யாராச்சும் கண்ணகி கக்கூசு கட்டுனா..வள்ளுவரு காலேஜ் கட்டுனாருன்னு சொன்னாங்களா? உன்னையத்தானே வச்சு குரங்குப்பயலுக ஊளை விடுராங்க... ஒன்னையப் பத்திதானடா பேசணும்...
ஒண்ணு சொல்றேன் கவனமாக் கேட்டுக்கோ...கூமுட்டப்பய ராமனே!
தமிழகத்திலே வாலாட்டாதேன்னு உன் வானரப்படையைச் சொல்லிவை! இல்லைன்னா ஒட்ட நறுக்கிடுவாக!
முக்கியமா வள் வள்னு குரைச்சிக்கிட்டுருக்கிற பிஜேபி காரனுக கிட்ட சொல்லிடு..."தமிழ்நாட்டுல போய் என்னத்தையாவது பண்ணிக் கழுதப்பெரட்டு பண்ணலாம்னு நினைக்க வேண்டாமின்னு"...
ஏன்னா அங்க, உன்னைய மாதிரி ஆள்களை ஒரு மனுசனாவே மதிக்கறதில்லங்கத மொதல்ல தெரிஞ்சுக்கோ... 'பிச்சை எடுக்குதாம் பெருமாளு'..'அதப் புடுங்குதாம் அனுமாரு'ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? அதில இருந்தே தெரியுதா உனக்கு என்ன மரியாதைய தமிழ்மக்கள் குடுக்கிறாங்கன்னு..
அதனால ரொம்ப வாலாட்டுனா..."அந்தா ஒரு கை இல்லாம போறான் பாரு..அவன்தான் இந்து முன்னணி"..."முன்னம்பல் பூரா பேந்து போகிறான் பாரு..அவன்தான் பிஜேபி".."ஒத்தக்கால வச்சிக்கிட்டு நொண்டுறானே..அவன்தான் விஷ்வ ஹிந்து பரிஷத்'னு சொல்லப் போறாங்க... உங்களில் ஊனமுற்றோர் ஜனத்தொகை தமிழ் நாட்டிலே அதிகமாகப் போகுது..அது மட்டும் நிச்சயம்..
அதுக்கு அப்புறம் உன்னோட விருப்பம்.. நான் சொல்றத சொல்லிட்டேன்..
(இந்த உரையாடலைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடந்த கும்மாங்குத்துக்களை தாமரை டிவி சென்சார் செய்துவிட்டதால் மேல் விவரங்களை அறியமுடியவில்லை)

நன்றி : இரும்பு அவர்களின் பதிவிலிருந்து

Saturday, August 4, 2007

விடுதலை போரின் கலங்கரை விளக்கம்:








18,19-ஆம் நூற்றான்டுகளின் காலனியதிக எதிர்ப்பு போராட்டங்களில்,துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு-நிசாம், மருது-தொண்டைமான் என தியாகத்தையும்,துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது.ஆனால் இந்த எல்லைகோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது.

எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாகா அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள்.அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே 'விடுதலையைக்' காணும்படி மக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள்.

உண்மையான அட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்து கொண்டு மன்னராட்சிக்குரிய அடயாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்தன் மூலம் துரோகிகளைத் திருப்திபடுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19-ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள்,20-ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்

இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885-இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி,பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாலித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.


1906-இல் இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான்.இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய இலட்சோப இலட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.

"வன்முறைப்பாதையா, அகிம்சைப்பாதையா" எனப் போராட்ட வழிமுறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதை போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதை போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலீம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20-ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.

1921,1930,1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம், என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்த்ப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் கொடுக்கத்துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார்.

காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, 'சென்டிமென்ட் அலை' அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.

இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.

"...நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பித்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்." -சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19-ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயேக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ , பல்லாயிரக்கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உண்ர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.

தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போரளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.

பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியை சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞந்தான். உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரண்த்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது.

பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?

1919-ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்ன்ர் ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார்

1921-ல் காந்தி 'ஓராண்டிற்குள் சுயாட்சி' என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள்-தொழிலாளர்கள்-அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்

1922 பிப். 5 ஆம் தேதி உ.பியில் உள்ள செளரி செளரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் செளரி செளரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஓத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்து தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏற்த்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின்மையும் சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின

தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியின் மீது துவக்கத்திலேயே விமர்சனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப்பெற்றனர். 1924-இன் இறுதியில் சச்சிந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தார்.

இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லகரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9-ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பண்த்தை கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உண்ர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர அனைவரும் கைது செய்யப் பட்டனர்.இயக்கம் செயலற்று நின்றது.
இந்தத் தேக்க நிலையில், 1926-இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் 'நவஜவான் பாரத் சபா' எனும் இளைஞர் அமைப்பை தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன்.

1927 இறுதியில் ராம்பிரசாத் ப்ஸ்மில், ராஜேந்திர லகிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டன்ர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.

1925-லிருந்து 1927-க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினுடாக, 1917-இன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும், இதர ஐரோப்பியக் கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்ணணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம் தான் அவருடைய வள்ர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சுழ்நிலையை 'நான் நாத்திகன் - ஏன்?' எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.

"அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன்.அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம்.
இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்தியமென்று தோன்றியது.....எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசன்மற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒரு நாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையாகும். "கற்றுண்ர்" எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கண்ந்தோறும் எதிரொலித்தது.....”

"நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின். எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவன, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான் புரிதலோடிருக்க வேண்டும்.”

"களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், உலகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிசத் தந்தை மார்க்சினது சில படைப்புகளையும், அதிகமாகத் தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்."

பகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செரிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாக பின் தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில் ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வேரா முதலான தோழர்கள் முயன்றனர்.

இதனடிப்படையில் 1928 செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதுவரை குடியரசு கழகமாக இருந்த அமைப்பின் பெயர், இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகமாக(இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.

காந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர்களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் - அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி- புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928-இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.

லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30-ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது, 'பஞ்சாப் சிங்கம்' என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசால் கடுமையாக தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர் நீத்த பொழுது, வட இந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

மக்களிடம் எழுந்த ஆவேசத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச- 17 அன்று, அவர் மீது தடியடி நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள் லாகூர் முழுவதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து சோ.கு.க சுவரொட்டி ஓட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டுத் தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியாளர்கள் நாடு முழுவதும் போற்றப்பட்டனர்.

தலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தோழிலாளர்-விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோக்ஷ், 1928- சாண்டர்ஸ் கொலைக்குப் பிற்கு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த போழுது "நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங்கள். நாங்கள் ஆங்கில ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்" என்று பகத்சிங் கூறியதாக பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், 'மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே' இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.

அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928-இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக 'தொழிற் தகராறு மசோதா'வை டெல்லி மத்திய சபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.

'தொழிற் தகராறு மசோதா' நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவதெனவுமான திட்டத்தை பகத்சிங் மத்திய கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடிந்த பின்னால் ஒரு வேலை தப்ப முடியவிலையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங், இவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

திட்டமிட்டப்படி, 1929 ஏப்ரல் 8-ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 'தொழிற் தகராறு மசோதா' நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டுகளை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். 'செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை' எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரட் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்கு தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.

1929 ஜுன் 6-ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப் பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர்.

"எங்களது ஒரே நோக்கம் 'செவிடர்களைக் கேட்கச்செய்வதும்', செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித்தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது... கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்ற்க் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்."

அன்று சர்வதேசப் பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத்சிங்கின் அறிக்கைகள் மக்களால் பேரார்வத்தோடு வரவேற்கப்பட்டன. வழக்கை விரைந்து நடத்திய அரசு, 1929 ஜுன் - 12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கேயும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரிமினல் கைதிகளைப் போல நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளை அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத்தைக் கண்டித்தும், பகத்சிங் லாகூர் சிறையிலிருந்தும், பி.கே.தத் மியான்வாலி சிறையிலிருந்தும் ஜுலை- 13ம் தேதியன்று உண்ணாவிரத்ததை துவங்கினார்கள். கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும், பகத்சிங், தத்துடன் உண்ணாவிரதத்தில் ப்ங்கேற்றனர்.அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஜதிந்தாஸ் செப்டம்பர் 13- ஆம் தேதியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்கத்தா எடுத்துச்செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

சாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜுலை 10 முதல் துவங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பகத்சிங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக்குள்ளாக்கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்தாலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங், மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ்த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசரணை, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்கு பதிலாக புரட்சியாளர்களுக்குச் செல்வாக்கு உண்டாவதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1930 மே- 1 -ம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதனடிப்படையில், அனைத்து நீதித்துறை விதிமுறைகளும் காற்றில் பற்க்க விடப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டோர் இல்லாமலேயே விசாரணை நடைபெறலாம்" என அறிவித்தது. பிறகு 'தடங்கலின்றி' நடைபெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7-ஆம் தேதியன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

1929 வரை பெயரளவு டொமினியன் அந்தஸ்தையே கோரிவந்த காங்கிரசுக் கட்சி, 1039-ல் 'பூரண சுதந்திர' கோரிக்கைக்கு மாறியதும், சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவக்கியதும், பகத்சிங் ஏற்படுத்திய புரட்சி அலை காங்கிரசை புரட்டி எடுத்ததன் விளைவேயாகும். இதனை 29.1.1931-ல் 'குடி அரசு' இதழில் பெரியார் குறிப்பிடுகின்றார்.

"..காந்தியவர்களே, இக்கிளர்ச்சி (சட்ட மறுப்பு இயக்கம்) ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யும் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றனர் ."

சட்ட மறுப்பு இயக்கத்தின் வள்ர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி-இர்வின் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக் கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான -ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்: "முடிவில், அவர் (காந்தி) ....பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையை தள்ளி வைக்கக் கேட்டுக்கொண்டார்."

(கோப்பு எண்: 5- 45/1931- 2 , உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு).

"அவர் (காந்தி) வெலியேறும் போழுது, மார்ச்- 4-ல் பகத்சிங் தூக்கிலப்பட இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலிப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும் எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்... அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகரித்தது போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை."

(மேற்குறிப்பிட்ட கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது - 1970 சுதந்திர தின மெயின்ஸ்ட்ரீம். தமிழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து.)

இதனிடையே, 1930 மே 28- ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டைச் சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப்படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சோ.கு.கவின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதி வரை தமது பெயருக்கேற்றார் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27-ல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய 'ஆல்ஃபிரெட் பூங்காவில்' வீரமரணமடைந்தார்.

இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச்- 23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். 'சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்' என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், 'வாருங்கள் போகலாம்' எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி , 'இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வறு மரண்த்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்' எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.

ஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்ற போதும், உண்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்க மறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரசு மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது.

கராச்சி காங்கிரசு மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரசு கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. "அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது." எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசு கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.

'புரட்சி என்றாலே பகத்சிங் என்று தன் பொருள்' என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஓளியில் காந்திய காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தார்.

மைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்னொரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையை போல, சட்லஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946-ல் தெலிங்கானா விவசயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. "இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று 1857-ல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாக புரிந்தது. தூரோகிகளின் கைக்கு அதிகாரத்தை கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.

தியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் பாடங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலை போராட்டத்தின் வீரமரபு, 1968 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.

இதோ துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்கவுஸி சிதம்பரம். " மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக்கொள்ளாதே " என்று மரணப்படுக்கையில் முனகுகிறார் எச்சூரி நவாப். " மகாப் பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை" என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் சிங்.

கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்த பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்: "இந்த போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை...."

அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்


உத்தம்சிங் நூற்றாண்டு விழா:


இறுதியாக மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.

"என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்" என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.

ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா!

உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத பெயர்! அவன் தனக்குத் தானே, தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!

இந்த இரண்டாயிரமாவது ஆண்டு அவனது நூற்றாண்டு. ஒருபுறம் புரட்சிகரக் கொலையாளியாகவும் தியாகியாகவும் மறுபுறம் சித்தபிரமை பிடித்தவன் - பயங்கரவாதியாகவும் வரலாறு அவனைப் பதிவு செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.

இந்து மதவெறிப் பாசிஸ்டுகள் உட்பட இந்திய தேசிய வாதிகளும் சீக்கியத் தீவிரவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும், போலி சோசலிஸ்டுகளும் கூட அவனுடைய பாரம்பரியத்துக்கு உரிமைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் உத்தம்சிங் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற பெயரும் தேசிய விடுதலைக்கு அவன் தெரிந்தெடுத்துக் கொண்ட புரட்சிப்பாதையும் புரட்சிகர நடவடிக்கையும் அவர்களது உரிமைக் கோரல்களை உதறி எறிகின்றன. அவன் உண்மையான, நாட்டுப் பற்றுமிக்க பொதுவுடைமைப் புரட்சிப் போராளி என்பதையே நிறுவுகின்றன.

அவன் நினைவை, இலட்சியத்தைப் போற்றும் முகமாக "ராம்முகம்மது சிங் ஆசத் என்கிற உத்தம்சிங்" என்கிற திரைப்படம் இப்போது வெளிவந்துள்ளது.

இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுகாரன்களையும் குண்டுகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.

"துப்பாக்கி ரவைதீரும்வரை சுடும்படி உத்தரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்" என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.

"அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட அதிகாரியாக ஜெனரல் டயர் தன் கடமையை நிறைவேற்றினார். எனவே அவர்மீது பழிபோட்டுத் தண்டிப்பதை நான் விரும்பவில்லை" என்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இன்று தேச பிதாவாகப் போற்றப்படுகிறார்.

அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். அன்று 300 பேர் கொல்லப்பட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. 2000 பேராவது இருக்கும் என்பது தான் மக்களின் நினைவில் நிற்கிறது.

இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம்சிங். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்திய புரட்சிக் கட்சி)யில் இணைந்தான்.

இந்து- இசுலாமிய - சீக்கிய ஒற்றுமை விடுதலையைக் குறிக்கும் வகையில் ராம்முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் சூட்டிக்கொண்டான். "மதத்தின் பெயரால் என்மக்களிடம் என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்" என்று சொன்னான். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன் 1933 -ல் பிரிட்டனுக்கு போய்ச் சேர்ந்தான்.

உத்தம்சிங்கின் இலக்குகளில் ஒருவனான ஜெனரல் டயர் காந்தியின் வக்காலத்து, காலனிய அரசின் பாராட்டு- பரிசு பெற்று பதவி உயர்வு பெற்று லண்டன் திரும்பி, பின்னர் வாத நோயால் இறந்தான். இன்னொரு இலக்கான பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ.டயர் பதவி ஓய்வு பெற்றிருந்தான். உத்தம்சிங் அவனது மாளிகையில் பணியாளாகா சேர்ந்தான். இரகசியமாகப் பலிவாங்கினால் எஜமான் -பணியாள் தகராறாகக் கருதப்படும். அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான்.

அந்நாட்களில் இலண்டன் நகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஓ.டயரைச் சுட்டு வீழ்த்தினான்.

"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை" என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு.

சுபாஷ் சந்திரபோஸ், உத்தம்சிங்கைப் பாராட்டினார். பின்னாளில் இந்தியாவில் தனது பரம்பரை ஆட்சியை நிறுவிய நேரு வருத்தம் தெரிவித்தார். இன்று தேசபிதா மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் காந்தி தீர்மானமாகக் கண்டித்தார்.

பீகார், சௌரிசௌரவில் போலீசு நிலையத்தைத் தாக்கி, 22 போலீசுக்காரர்களைக் கொன்ற விவசாயிகளின் வீர எழுச்சி உட்பட பல ஆங்கில எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி காந்தியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களின் தியாகப் பாரம்பரியத்தில் ஊறிப் போனவன் உத்த்ம்சிங். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. "அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது" என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, கராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தி, பட்டேலை எதிர்த்து, "பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிப்போ" என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர், மக்கள்.

அப்படிப்பட்ட காங்கிரசு வீரதீரச் செயலை எப்படி வரவேற்கும்? நேருவின் நெருங்கிய அந்தரங்கத் தரகன் கிருஷ்ணமேனன், தன்னை ஒரு கம்யூனிச அனுதாபியாகக் காட்டிக்கொண்டு கம்யூனிசத்தையே கொச்சைப்படுத்தியவன். "அறியாமல் - மனபேதலிப்பால் செய்துவிட்டேன்" என்று முறையிடும் படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார் இந்த கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டு தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேகத்துடன் நிராகரித்தான், உத்தம்சிங்.

இவ்வாறுதான் பகத்சிங் பாரம்பரியத்தில் பஞ்சாப் முழுவதும் ஒரு வீரதீர நாயகனாகவும் தியாகியாகவும் உருவானான். அவன் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டு பெண்டான்வில்லா சிறையில் புதைக்கப்பட்டான்.

முப்பது ஆண்டுகளுக்குப்பின் அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவனது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

"இது ஒரு பழிவாங்கும் சித்திரம் அலல. எந்த வகை ஒடுக்குமுறையானாலும் அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய ஒரு திரைப்படம்" என்கிறார் அதன் இயக்குநர் சித்தார்த்.

உத்தம்சிங் ஒரு பயங்கரவாதி அல்ல. சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வதுதான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும், பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.

தியாகி பகத்சிங்கின் பெயரை சீக்கிய - காலிஸ்தானி பயங்கரவாதிகள் கேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகச் செய்திப் படமொன்றை ஏற்கனவே ஆனந்தபட்வர்த்தன் எடுத்திருந்தார். தியாகி உத்தம்சிங்கின் புகழையும் அவர்கள் கேடாகப் பயன்படுத்துவதை எதிர்த்திட இத்திரைப்படம் உதவும் என்கிறார் இதன் திரைக்கதை- உரையாடல் ஆசிரியர்.

இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக இந்தி சினிமாக்கள், தனிநபர் காரணங்களுக்காக வெறுமனே வெறியும் ஆத்திரமும் பொங்கும் இளைஞனைக் கதாநாயகனாகச் சித்தரிக்கின்றன. குரூரமான காட்சிகள், வன்முறைக்காக வன்முறை என்பதே சினிமா வியாபாரிகளின் கரு.

ஆனால் உத்தம்சிங்கின் கதையோ, நாட்டின் மாறுபட்ட பண்பாடுகளை மத நம்பிக்கைகளையும் மதிக்கும் அதே சமயம் நாட்டு விடுதலை சமத்துவம் என்கிற தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராளியின் உண்மை வரலாறு. ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்திற்கும், நீதி நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறை நியாயமானது, அவசியமானது என்று வாழ்ந்து காட்டினார் உத்தம்சிங்.

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

ஆனால் "கத்தியின்றி இரத்தமின்றி" காந்தியின் சத்தியாகிரகமும் அகிம்சையும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது. பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் தூக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தவர்கள்தாம் காந்திய தேசியவாதிகள். ஆனால் இன்றோ அவர்களை பூசை அறைத் தெய்வங்களாக்கி "தேச பக்தி"ப்பாயிரம் பாடுகிறார்கள்.

பகத்சிங்- உத்தம்சிங் போன்றவர்கள் மதச்சார்பற்ற, பொதுவுடமைப் புரட்சியாளர்களாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை மூடிமறைத்து அவர்களுக்குக் குடுமியும் நாமமும் சாத்தி இந்துத்துவ தேசியவாதிகளைப் போல அவர்களைச் சித்தரிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் பாசிச மத வெறியர்கள்.

வெள்ளையரின் நேரடி ஆட்சியின் போது இருந்ததைப் போலத்தான் இன்றும் ஆயுதமேந்தாமலும், புரட்சிகர வன்முறையில் இறங்காமலும் உழைக்கும் மக்கள் தமக்குரிய நியாயத்தையும் வாழ்வுரிமையையும் நிலைநாட்டவே முடியாது. வேலை வாய்ப்பு கேட்டுப் போராடிய பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மீது சுட போலீசை ஏவி தடியடி நடத்துகிறது அரசு. ஒன்பது, பத்து வயது சிறுவர்கள் மீதும் 65 வயதுக்கும் மேலான மூதாட்டி மீதும் கூட "தடா" எனப்படும் ஆள்தூக்கிச் சட்டத்தை ஏவி சிறையிலடைக்கிறது, அரசு.

"இன்னொரு ஜாலியன்வாலாபாக்" என்று எத்தனை மக்கள் திரள் படுகொலைகளைத்தான் சொல்வது? பீகாரில் ஆர்வால் நகர மைதானத்தில் கூடிய கூலி ஏழை விவசாயிகளைச் சூழ்ந்துக் கொண்டு தோட்டா தீரும் வரை சுட்டுப் பொசுக்கினர். நாகபுரியில் மந்திரியிடம் மனுக்கொடுக்கப்போன ஆதிவாசிகளை முற்றுகையிட்டு தடியடி நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவரைக் கொன்றனர். பம்பாயில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்ததை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். உத்திரப்பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டனர். இதோ, நெல்லையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப்போன மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தப்பி ஒட வழியின்றி தாமிரவருணி ஆற்றில் தள்ளி பெண்கள், குழந்தை உட்பட 17 பேரைக் கொன்றனர்.

இந்த "ஜாலியன்வாலாபாக்" படுகொலைகளுக்கு நியாயம் பெறவேண்டாமா? இதற்கெல்லாம் பகத்சிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா? இல்லை, விசாரணைக்கமிசன் கண்துடைப்புகளை ஏற்பதா? சத்தியாகிரகம், அகிம்சை வழி என்று ஏமாந்து நிற்பதா?

சத்தியாகிரகம், அகிம்சை என்பதெல்லாம் உண்மையில் பத்தாம்பசலித்தனமான பம்மாத்து. இந்தச் சமுதாயத்தின் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான ஒழுங்குமுறையே ஆயுதந்தாங்கிய, பயிற்சி பெற்ற, வன்முறை - பயங்கரவாத நிறுவனங்களால்தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைச் சுரண்டலுக்கு எதிராகக் கேள்விகேட்டு தனிநபராகவோ, குழுவாகவோ பெருந்திரளாகவோ மக்கள் எழுந்தபோதெல்லாம் அந்த அரசு வ்ன்முறை ஏவிவிடப்பட்டு பயபீதி விதைக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரி, போலீசுக்காரன், நீதிபதி, இராணுவச் சிப்பாய் எல்லாருமே நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் சாதாரணமக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அச்சுறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அரசு அமைப்பே வன்முறையாக வடிவம் எடுத்துள்ள அதேசமயம், அதற்கெதிராக உணர்ச்சிவசப்பட்டுஒரு குடிமகன் நியாயங்கேட்டு சுட்டு விரலை உயர்த்தினால் கூட பயங்கரவாத, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கேள்விமுறையின்றி கொல்லப்படுகிறான்.

"பகத்சிங், உத்தம்சிங் வாழ்ந்த காலம் அந்நியர் ஆட்சி இருந்தது. ரௌலட் சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் இருந்தன. அவர்கள் ஆயுதம் ஏந்தினர்; எதிரிகளைப் பழிதீர்த்துத் தியாகிகளாயினர். இன்று ஆயுதந்தூக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லை. மக்கள் ஜனநாயக பூர்வமாகவே தமது கோரிக்கைகளை அடையலாம். ஆகவே, அகிம்சைவழியும் சத்தியாகிரகமுமே சரியானது" என்று பத்தாம்பசலிகள் போதிக்கின்றனர்.

பகத்சிங், உத்தம்சிங் வழியிலேபோய் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிடக்கூடாது என்றுதான் காந்தி- நேரு - ஜின்னாக்கள் ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டு போலி சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால்தான் இருநாடுகளின் மீதும் ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்கிறது. அவர்களின் வாரிசுகள் நாட்டை மறுகாலனியாக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அன்று ஒரு ரௌலட் சட்டம்தான் இருந்தது. இன்று "தடா", "பொடா", "மிசா", "மினிமிசா", தேசியப் பாதுகாப்புச் சட்டம், அரசு துரோகச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களும் "ஜாலியன் வாலாபாக் படுகொலை"யைப் போன்ற பல மக்கள் திரள் படுகொலைகளும் நீடிக்கின்றன. அன்று பகத்சிங்குகளும், உத்தம்சிங்குகளும் சட்டப்படியாவது விசாரித்துத் தூக்கிலிடப்பட்டனர். இன்றோ, போலீசுடன் மோதல் என்கிற பெயரில் கேள்விமுறையின்றி நேரடியாகவே போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மூலம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவரைத் தூக்கிலிட்டதன் மூலம் விடுதலைத் தீயை அனைத்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கனவு கண்டனர். ஆனால் உத்தம்சிங்குகள் உதித்தனர். அதுபோலவே புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தியுள்ள போராளிகளைப் படுகொலை செய்வதன் மூலம் விடுதலை- புரட்சித் தீயை அணைத்துவிட ஆளுவோர் எத்தனிக்கின்றனர். ஆனால் போராளிகள் மடிந்து கொண்டும் புதிதுபுதிதாக பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இறுதி இலட்சியம் ஈடேறும்வரை இந்த வரலாறு நீடிக்கும்.